அவலூர்பேட்டை தேவனூரில் திருநாதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2553 days ago
அவலூர்பேட்டை:தேவனூர் திருநாதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மேல்மலையனூர் தாலுகா தேவனூர் கிராமத்தில் பழமையான திருநாதீஸ்வரர் கோவிலில் உலக நன்மை கருதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு சுவாமிக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், தீபாரதனையும், இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கமலாம்பிகை சமேத திருநாதீஸ்வரர் பக்தர்களுக்கு திருமண கோலத்தில் அருள் பாலித்தார்.