உப்பு கரிக்கும் கடல் நீர் புனிதமாவது எப்படி?
ADDED :2588 days ago
கசப்பான வேம்பை மாரியம்மனாக வழிபடுவது போலவே. உலகின் தண்ணீர்த்தேவையை கடலே பூர்த்தி செய்கிறது. குடிநீர், விவசாயத்திற்கு மழை தருவதும் அதுவே. முத்து, பவழம் என ரத்தினங்களை வழங்குகிறது. கடல்வாழ் உயிர்கள், மீனவர்களுக்கு தாயாக இருப்பதால் கடலம்மா என அழைக்கின்றனர். எல்லா நதிகளும் சங்கமிக்கும் கடலில் நீராட பாவம் தீரும். கடவுளின் வடிவமான கடலைக் காப்பது நம் கடமை.