குலதெய்வமே! என் குறை தீர்க்க வா!
ADDED :2585 days ago
காஞ்சி மகாசுவாமிகளை தரிசிக்க வந்த பக்தர் கண்ணீருடன் “சுவாமி... எத்தனையோ கோயில்களுக்குப் போயும் என் கஷ்டம் தீர்ந்தபாடில்லை” என்றார். அருள் பொங்கும் கண்களால் பார்த்தபடி சுவாமிகள் “உன் குலதெய்வத்தை வழிபட்டாயா?” எனக் கேட்டார். “குலதெய்வமா... எதுவென்றே தெரியாதே” என்றார். “வயதான உறவினர்களை சந்தித்துப் பேசு. அவர்களுக்கு குலதெய்வம் எதுவென்று தெரிந்திருக்கும். அங்கு போனால் கஷ்டம் ’சூரியனைக் கண்ட பனி’யாக மறையும்” என்றார் சுவாமிகள்.
அங்கு நிற்கும் போது நம் பரம்பரையின் வரிசையில் நிற்பதாக அர்த்தம். சங்கிலியின் கண்ணியாக வரும் இந்த தொடர்பு வேறெங்கும் உண்டாகாது. கடவுளின் அருட்சக்தியும், முன்னோர்களின் ஆசியும் குலதெய்வத்தின் வடிவில் நம் குடும்பத்துக்கு கிடைக்க வேண்டும் என வழி செய்யப்பட்டிருக்கிறது என்பதால் குலதெய்வத்தை மறக்காதே” என சொல்லி பிரசாதம் கொடுத்தார் காஞ்சி மகாசுவாமிகள். திருப்பூர் கிருஷ்ணன்