உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் கோயிலில் கிருத்திகை விழா

மயிலம் கோயிலில் கிருத்திகை விழா

மயிலம்: மயிலம் சுப்பரமணியர் சுவாமி கோயிலில் ஐப்பசி மாத கிருத்திகை விழா நடந்தது.
மயிலம் சுப்பரமணியர் சுவாமி கோயில் ஐப்பசி மாத கிருத்திகையை முன்னிட்டு நேற்று (அக்., 26ல்) காலை 6:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.

பகல் 11:00 மணிக்கு கோயில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிகளுக்கு பால், சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களினால் அபிஷேகம் நடந்தது.

மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. இரவு 7:30 மணிக்கு மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பரமணியர் சுவாமி வெள்ளி தேரில் மலை வலம் வந்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !