பாவம் போக்கும் இலை
ADDED :2646 days ago
மகாலட்சுமி அஷ்டோத்திரத்தில் 78வது நாமாவளி ’பில்வ நிலையாயை நம:’ என்று மகாலட்சுமியைப் போற்றுகிறது. ’வில்வ இலையில் இருப்பவள்’ என்பது இதன் பொருள். இதனால் வில்வ மரத்தை ’ஸ்ரீவிருட்சம்’ என்று அழைப்பர். லட்சுமி மந்திரத்தை வில்வமரப் பலகையில் வரைந்து வழிபட்டால் செல்வம் பெருகும். வில்வ இலைகளால் சிவனை திங்கட்கிழமைகளில் அர்ச்சனை செய்ய பாவம் தீரும்.