வரலக்ஷ்மி விரத மஹிமை
விரத மஹிமைசாதாரணமாக எல்லோராலும் எப்போதும் பெரும் முயற்சி கொண்டு தேடப்படும் செல்வத்திற்கு அதிபதி லக்ஷ்மிதேவி. லக்ஷ்மி தேவியின் திரு அவதாரம் துவாதசி வெள்ளிக்கிழமை. ஆகவே, அன்று லக்ஷ்மி தேவியைப் பூஜை செய்பவர் லக்ஷ்மியின் அருளை பரிபூர்ணமாகப் பெறுவர். இந்த வரலக்ஷ்மி விரதத்தைச் செய்து அடுத்தவர்களையும் வாழ வைத்த சியாம பாலாவின் சரிதம் இது.பத்ரச்ரவஸ் என்ற மன்னன் உத்தமமான விஷ்ணு பக்தன் கற்புக்கரசியான சுரசந்த்ரிகா அவன் மனைவி. இந்தத் தம்பதிகளின் மகள் சியாமபாலா. தம் செல்ல மகளை, சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள்.சில காலம் சென்று ஒருநாள், செந்தாமரைச் செல்வியான லக்ஷ்மிதேவி, வயதான சுமங்கலி வேடத்தில் சுரசந்திரிகா அரண்மனைக்குள் நுழைந்தாள். மகளைப் புகுந்த வீடு அனுப்பிவிட்டுத் தனியாக இருந்த சுரசந்த்ரிகா விடம், அன்போடு வரலக்ஷ்மி விரதத்தை விரிவாகக்கூறி அதைக் கடைப்பிடிக்கும்படி சொன்னாள். ஆனால், அரசியான சுரசந்த்ரிகாவோ வயதான சுமங்கலி வடிவில் வந்து உபதேசம் செய்த லக்ஷ்மிதேவியை, “யாரோ யாசகம் கேட்க வந்தவள்” என்று நினைத்து, கன்னத்தில் அறைந்து அவமானப்படுத்தி வெளியே விரட்டி விட்டாள். இப்படி அரசியால் விரட்டப்பட்ட லக்ஷ்மிதேவியை அரசியின் மகளான சியாமபாலா சமாதானப்படுத்தினாள். அத்துடன் லக்ஷ்மி தேவியிடம் இருந்து வரலக்ஷ்மி விரதத்தை விரிவாகக் கேட்டு உபதேசமும் பெற்றாள். பக்தியுடன் விரதத்தைக் கடைப்பிடித்தாள். விரத மகிமையால் சிறந்த செல்வம் பெற்றாள். இதே நேரம், இவள் பெற்றோர்களோ லக்ஷ்மிதேவியை அவமானப்படுத்தியதால் எல்லாவற்றையும் இழந்து ஏழைகளாக ஆனார்கள். விவரம் அறிந்த சியாமபாலா, ஒரு குடம் நிறைய தங்கத்தைத் தனது பெற்றோர்கள் வறுமை தீர அவர்களுக்கு அனுப்பினாள். அனுப்பிய தங்கம் பெற்றோர்களிடம் போனதும் (அவர்கள் தீவினையால்) அது கரியாக ஆகிவிட்டது. இதை அறிந்த சியாமபாலா தன் தாயான சுரசந்த்ரிகாவிடம் வரலக்ஷ்மி விரதத்தைப் பற்றிச் சொல்லிப் பூஜை செய்யும்படி கூறினாள்.அவளும் மகள் சொன்னபடியே வரலக்ஷ்மி விரதத்தைக் கடைப்பிடித்து, பூஜை செய்து, அழிந்த செல்வங்களை எல்லாம் மீண்டும் பெற்று சுகவாழ்வு வாழ்ந்தாள். ஆகவே, பெண்மணிகள் எல்லோரும் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு வாழ வேண்டுகிறோம்.கதைமுன்பொரு சமயம் தேவர்கள் வசிக்கும் கைலாஸ பர்வத சிகரத்தில் பரமசிவன் பார்வதியுடன் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தார். அச்சமயம் பார்வதி, “நாதா, நான் உங்களை ஜெயித்து விட்டேன் ” என்றார். இப்படி இருவருக்கும் வாக்குவாதம் வந்தது.அப்பொழுது அங்கிருந்த சித்திரநேமி என்ற கணதேவதையை இருவரும் மத்யஸ்த்தம் கேட்க, அவன் ஒரு சாராக, ‘பரமசிவன் தான் வெற்றி கொண்டார்’ எனக்கூறினான். அதற்குப் பார்வதி அவன்மீது கோபம் கொண்டு “நீ பொய் சொன்னதால் குஷ்டரோகியாகி ஒளியிழந்து தவிப்பாயாக ” என்று சபித்தாள்.இதற்குப் பரமசிவன் வருந்தி, “தேவி, இந்த சித்திரநேமி எப்பொழுதும் பொய் என்பதே பேசாதவன். அவன் உண்மையைத்தான் கூறினான். நீ அவனை வீணாகச் சபித்து விட்டாயே! அவன் மீது நீ அருள் கூர்ந்து அவன் சாபத்தை அகற்றுவாயாக ” என்று அவளை வேண்டினார்.அதற்கு மனமிரங்கிய பார்வதிதேவி, “எப்பொழுது அழகிய தடாகதீரத்தில் தேவகன்னிகைகள் புண்ணியமான ஸ்ரீவரலக்ஷ்மீ விரதத்தை அனுஷ்டிப்பார்களோ, அப்பொழுது உன் சாபம் நீங்கும், ” என்று கூறினாள்.பிறகு சித்திரநேமி, சில தினங்களில் ஒரு தடாகக் கரையில் குஷ்டரோகியாக அங்கு வாசம் புரிந்து வந்தான். ஒரு நாள் அங்கே வந்த தேவப்பெண்களைக் கண்டான். தேவி பூஜையில் ஈடுபட்ட அந்தப் பதிவிரதைப் பெண்கள் தேவியை வணங்கி வழிபடுவதைக் கண்டு, “அம்மையீர், தாங்கள் செய்யும் பூஜை யாது? இதை நான் செய்யலாமா? நான் பார்வதியின் சாபத்தால் குஷ்டரோகியாகித் துன்புற்றிருக்கிறேன். என் துன்பம் நீங்கும் வழியைத் தாங்கள் கூறியருள வேண்டும்” என்று வேண்டினான்.தேவப்பெண்கள் கூறியதாவது: நாங்கள் இன்று ஸ்ரீவரலக்ஷ்மீ விரதம் அனுஷ்டிக்கிறோம். இது திவ்யமானது. வேண்டும் வரங்களை அளிக்கக்கூடியது. சூரியன் கடகத்தில் இருக்கும்போது, அதாவது கங்கையும், யமுனையும் சேரும் காலத்தில் துங்கபத்ரா நதிக்கரையில் சிராவண மாதத்தில் சுக்லபக்ஷத்தில் வெள்ளிக்கிழமையன்று முறைப்படி மஹாலக்ஷ்மியைப் பற்றியதான இந்த விரதத்தைத் தொடங்க வேண்டும்.தேவகன்னிகைகள் செய்த இந்த பூஜையை சித்திரநேமி பார்த்ததால் அவனுடைய குஷ்டநோய் நீங்கித் தங்க நிறம் பெற்றான்.‘நான் முயற்சியுடன் எல்லாவற்றையும் அளிக்கும் இந்த விரத்தை மேற்கொள்கிறேன் ’ என்று கூறி, தானும் விரதத்தைச் செய்து, தேவர்கள் அனைவரையும் அனுஷ்டிக்கச் செய்தான்.பிறகு பிராம்மணனுக்கும், ஸன்யாஸிக்கும், தெய்வத்திற்கும், பிரம்மச்சாரிக்கும், சுவாஸினிக்கும் முறையே ஐந்து வாயனதானங்களைச் செய்தான். அதன்பின், தேவிக்கு நமஸ்காரம் செய்து தன் இருப்பிடம் சென்றான்.பிறகு, கைலாஸம் சென்று பார்வதீ பரமேஸ்வரர்களை வணங்கி அவர் அருகில் நின்று, ‘தேவி, வரலக்ஷ்மியின் அருளால் தங்கள் திருவடியைக்காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது” என்று கூறி வணங்கினான் அப்பொழுது பரமசிவன் “இன்று முதல் நீ இந்த கைலாஸத்தில் ஸகல போகங்களையும் அனுபவித்துக் கொண்டிருப்பாயாக. பிறகு இந்த விரதத்தின் மகிமையால் வைகுந்தலோகம் சேருவாய் ” என ஆசி வழங்கினார்.முன்பு பார்வதியும் ஸத்புத்திர லாபத்திற்காக இந்த விரதத்தை அனுஷ்டித்தாள். அதன் மகிமையால் இவளுக்கு ஷண்முகன் தோன்றினான். இந்த விரதத்தை படித்தால் ஸகல ஸௌபாக்கியங்களையும் அடைவர்.மேலும் சவுராஷ்டிர தேசத்தில் குண்டினம் என்ற நகரத்தில் சாருமதி என்ற பெண் இந்த வரலக்ஷ்மீ விரதத்தை உபதேசிக்கப்பெற்று, சிராவண மாதம் சுக்லபக்ஷ பவுர்ணமியுடன் கூடிய வெள்ளிக்கிழமையன்று தேவியை வரித்து ஸகல பாக்யங்களையும் பெற்றாள்.அதிலிருந்து பூலோகத்தில் இப்பூஜை பரவியது. இந்த வரலக்ஷ்மீ விரதமகிமையைப் படிப்பவர்களுக்கும் கேட்பர்வர்களுக்கும் வரலக்ஷ்மியின் அருளால் தனதான்ய ஸம்பத்துக்கள் உண்டாகும்.குறிப்பு:1. தாமரை மலர்களால் அர்ச்சிப்பது விசேஷம்.2. கலசத்திற்கு சிவப்பு பட்டு ரவிக்கை துணி சாத்துவது விசேஷம்.3. செவ்வரளி மலர்கள் விசேஷம்.4. சர்க்கரை பொங்கல் நைவேத்யம் விசேஷம்.ஆடி அல்லது ஆவணி மாதம் பவுர்ணமிக்கு முன் வருகிற வெள்ளிக்கிழமையன்று வரலக்ஷ்மீ விரத பூஜையைச் செய்ய வேண்டும்.பூஜை அறை அலங்காரம்: பூஜைக்கு முதல் நாளே வீட்டை மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்து, மண்டபத்தை அலங்கரிக்க வேண்டும்.பூஜை அறையை மெழுகி கோலமிட்டு வெள்ளை அடிக்க வேண்டும்.அம்மனின் திருவுருவப் படத்தை சுவற்றில் அவரவர் குல சம்ப்ரதாயப்படி வரையவும் (அல்லது)பூஜை அறையில் மண்டபமோ, விதானமோ அமைத்து அலங்கரிக்க வேண்டும்.மண்டபத்தின் இருபக்கங்களிலும் வாழைக் கன்றை கட்டி, பூக்களால் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யவும்.கலச அலங்காரம்முதலில் வீட்டை தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும்கலசத்திற்கு உள்ளே அரிசி நிரப்பிக் கொள்ளவும். (தங்கம் /வெள்ளி/ செம்பு).அவரவர் சம்ப்ரதாயப்படி அரிசி அல்லது தீர்த்தம் நிரப்பிக் கொள்ளவும்.பிறகு, அதில் எலுமிச்சம் பழம், வெற்றிலை, பாக்கு, முழு நாணயம் இவைகளைப் போடவும்.மாவிலைக் கொத்தையும், மஞ்சள் தடவிய தேங்காயையும் வைத்துச் சந்தன புஷ்பங்களால் அலங்கரித்து, அதன் மேலே ஸ்ரீ வரலக்ஷ்மி அம்மன் முகத்தை வைக்க வேண்டும்.அதன்மேல் வஸ்த்ரம் (ரவிக்கைத்துணி), ஆபரணங்கள் அணிவிக்கவும்.வீட்டின் கிழக்குபக்கமாக நுனிவாழை இலையைப் போட்டு, நெல்லைப் பரப்பி பிறகு ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்ப வேண்டும்.அதன் மேலே கலசத்தை வைத்து பழம், வெற்றிலை பாக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.கற்பூரம் காண்பித்து ஹாரத்தி எடுக்க வேண்டும்.பிறகு, உள் நிலைப்படியிலிருந்து அம்மனை அழைத்து வரும் பாவனையுடன் கொண்டு வைத்து, கலசத்திற்கு முன்னால் ஸத்தோத்திரங்களைச் சொல்லி, லக்ஷ்மீ ராவே மா இன்டிகி (பார்க்க பக்கம் 2.24) போன்ற மங்களகரமான பாடல்களைப் பாடி அம்மனை உள்ளே அழைத்துப் பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.ஸ்ரீ வரலக்ஷ்மீ ஹாரத்தி பாடல்ராகம் மாயாமாளவ கௌளை தாளம் சதுஸ்ரம்லக்ஷ்மீ ராவே மா இண்டிகிக்ஷீராப்தி புத்ரி வரலக்ஷ்மி ராவே மா இண்டிகிலக்ஷ்மி ராவேமா இண்டிகி ராஜிதமுக நெலகொன்னஸுக்ஷ்மமுக மோக்ஷமிச்சு ஸுந்தரி ப்ருந்தாவனதாரி (லக்ஷ்மீ)குங்கும பச்சகஸ்தூரி கோரிக தோறு கோரோ ஜனமுகோரு ஜவ்வாஜுலு அங்கித முகனே அலரு கந்தமுசுல கந்தம் ஸந்த முக ஸாம்ப்ராணி தூபமுமாதா நீகு ப்ரீதிக ப்ரக்யாதிகா ஸமர்ப்பிந்து நம்ம (லக்ஷ்மீ)பசுபு அக்ஷதலு பரிமள கந்தமுபஞ்ச பில்வமுலு பூர்ண கலச ’முமாதா நீகு ப்ரீதிக ப்ரக்யாதிகா ஸமர்ப்பிந்துனம்மா (லக்ஷ்மீ)குண்டு மல்லெ ஸமர கானு தண்டிகசாமந்தி பூலு மேலைன பாரி ஜாதமுமாதா நீகு ப்ரீதிக ப்ரக் யாதிகா ஸமர்ப்பிந்து நம்ம (லக்ஷ்மீ)அந்த முக ஜரிகஞ்சு பஞ்ச குந்த நம்புபச்சனி ரவிக சந்தடிக சாம்பிராணி தூபமுமாதா நீகு ப்ரீதிக ப்ரக்யாதிகா ஸமர்ப்பிந்து நம்ம (லக்ஷ்மீ)ஸ்ரீ வரலக்ஷ்மி விரதம்1. பூஜைக்கு வேண்டிய பொருட்கள் பட்டியல்( பக்கம் 6 பக்கம் 7ம் பக்கங்களைப் பார்க்கவும்.) இந்த பூஜைக்கு தேவையான விசேஷ பொருட்கள் : நான்கு கைகளைக் கொண்ட அம்மன் முகம்.பொதுவான பூஜைக்கு தேவையான பொருட்கள்1. மஞ்சள்பொடி2. கற்பூரம்3. சந்தனம்4. பூமாலை5. உதிரிப்பூக்கள்6. வெற்றிலை, பாக்கு7. ஊதுபத்தி8. சாம்பிராணி9. பஞ்ச (திரிக்காக)10. நல்லெண்ணெய்11. கற்பூரம்12. வெல்லம்13. மாவிலை14. வாழைப்பழம்15. அரிசி16. தேங்காய்17. தயிர்18. தேன்19. தீப்பெட்டி20. பூணூல்21. வஸ்த்ரம்22. அக்ஷதை (பச்சரிசியுடன் மஞ்சள் பொடி கலந்தது)23. பஞ்சாம்ருதம் (வாழைப் பழம், பால், தேன், நெய், சர்க்கரை கலந்தது)24. கோலப்பொடி / அரிசி மாவு25. பஞ்சகவ்யம்:1. பசுவின் சிறுநீர் (கோமியம்), 2. பசுவின் சாணம், 3. பால், 4. தயிர், 5. நெய் இவை ஐந்தும் சேர்ந்த கலவையே பஞ்ச கவ்யமாகும்.26. திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால்.குறிப்பு: ஹோமங்களுக்கு நெய் உபயோகிப்பது உத்தமம். ஒரு சில பூஜைகளில் நவதான்னியங்கள், கருகு மணிமாலை, பனைஓலை, மஞ்சள் கொத்து, ஏலக்காய் பொடி, கண் மை, அகல் விளக்கு, மூங்கில் தட்டு, பஞ்சினால் செய்த மாலை, போன்ற சில விசேஷ பொருட்கள் தேவைப்படுகின்றன. அந்தந்த பூஜையை செய்யும்போது அதற்கு தேவையானவற்றை முதலிலேயை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.மாற்றுப் பொருள்கள்பூஜைக்கு உரிய சில பொருள்கள் கிடைக்காமலிருக்கலாம். இந்த நிலையில் ஒரு பொருளுக்குப்பதிலாக இந்தப் பொருள்தான் மாற்றுப் பொருள் என்பது விரத கல்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை1. தேனுக்குப் பதிலாக வெல்லம்,2. வஸ்த்ரம், ஆபரணம், சத்ரம், சாமரம் முதலிய ராஜோப சாரங்களுக்குப் பதிலாக அக்ஷதை (அ) புஷ்பம்.3. நைவேத்ய பொருட்கள்: சாதம், நெய், பருப்பு, பாயஸம், உளுந்து வடை, அப்பம், இட்லி, பக்ஷணங்கள், தேங்காய், வாழைப்பழம் மற்றும் இதர பழங்கள்.1. பூர்வாங்க பூஜைகள்முதலில் (பக்கம் 10 பக்கம் முதல் பக்கம் 14ம் பக்கம்) வரை உள்ள (தீபம் + ஆசமனம் + குரு த்யானம் + கணபதி தியானம் + ஸங்கல்பம் + ஆஸன பூஜை +ஆத்ம பூஜை) பூர்வாங்க பூஜைகளைச் செய்யவும்.1. பூர்வாங்க பூஜை1. தீப மந்திரம்(விளக்கை ஏற்றி வைத்து, தீபத்தைப் பார்த்து, இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)தீபஜ்யோதி: பரம் ப்ரஹ்மதீபஜ்யோதிர் ஜனார்த்தன:தீபோ ஹரது மே பாபம்தீபஜ்யோதிர் நமோஸஸ்து தே2. ஆசமனம்(நமது வலதுகை விரல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தெய்வம் குடியிருப்பதாக ஐதீகம். இதே போல் நமது அங்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தெய்வம் வசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆசமனம், அங்கவந்தனம் ஆகியன செய்தால், நமது உள்ளமும், உடலும் சுத்தமாகிறது என்று சாஸ்திரங்கள் கூறுவதை நாம் உணர வேண்டும். எல்லா நித்ய கர்மாக்களுக்கும், வைதிக கர்மாக்களுக்கும் ஆசமனம், அங்க வந்தனம் இன்றியமையாததாகும்.)(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங் கையில் விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)ஓம் அச்யுதாய நம:ஓம் அனந்தாய நம:ஓம் கோவிந்தாய நம:அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)(ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசத்துக் கொள்ள வேண்டும்.)1. கேச ’வ வலக்கைக் கட்டை விரல் வலக்கன்னம்2. நாராயண வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்3. மாதவ வலக்கை மோதிர விரல் வலக்கண்4. கோவிந்த வலக்கை மோதிர விரல் இடக்கண்5. விஷ்ணு வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி6. மதுஸூதன வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி7. த்ரிவிக்ரம் வலக்கை சிறுவிரல், வலது காது8. வாமன வலக்கை சிறுவிரல் இடது காது9. ஸ்ரீதர வலக்கை நடுவிரல், வலதுதோள்10. ஹ்ருஷீகேச ’ வலக்கை நடுவிரல், இடது தோள்11. பத்மநாப நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)12. தாமோதர ஐந்து விரல்களும் சேர்த்து, தலைகுரு த்யானம்குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு:குருர்தேவோ மஹேச் ’ வர:குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்மதஸ்மை ஸ்ரீகுரவே நம:4. கணபதி தியானம்இரண்டு கைகளிலும் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.சு’க்லாம்பரதரம் விஷ்ணும்ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்ப்ரஸன்ன வதனம் த்யாயேத்ஸர்வ விக்னோபசா ’ந்தயே5. ப்ராணாயாமம்(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கையிலும், மூச்சை மெதுவாக வெளியிடும் போதும், இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாகச் சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ:, ஓம்மஹ:, ஓம் ஜன:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம்தத்ஸவிதுர் வரேண்யம், பர்க்கோதேவஸ்ய தீமஹி, தியோ யோ ந:ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ்ஸுவரோம்(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)6. ஸங்கல்பம்(வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக்கொண்டு, இடது கையுடன் சேர்த்து வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு, அக்ஷதையை வடக்கே போடவும்.)மமோபாத்த ஸமஸ்த துரித, க்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம்,கரிஷ்யமாணஸ்ய கர்மண:நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ விக்னேச்’வர பூஜாம் கரிஷ்யே7. ஆஸன பூஜை(பூஜை ஆரம்பிக்கும் முன் நாம் அமரும் ஆசனம் / பலகையை சுத்தப்படுத்துவதற்காக, கீழ்க்காணும் மந்திரங்களை சொல்லி தீர்த்தம் தெளித்து பிறகு அமர்ந்து கொள்ளவும்.)ப்ருத்வி த்வயா த்ருதா லோகாதேவி த்வம் விஷ்ணுனா த்ருதாத்வம் ச தாரய மாம் தேவிபவித்ரம் குரு ச ஆஸனம்8. ஆத்ம பூஜை(மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை தியானித்து கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி தலையில் அக்ஷதையைப் போட்டுக்கொள்ளவும்.)தேஹோ தேவாலய: ப்ரோக்த:ஜீவோ தேவ: ஸநாதன:த்யஜேத் அஜ்ஞான நிர்மால்யம்ஸோஹம்பாவேன பூஜயேத்2. ஸ்ரீ விக்னேச் ’வர பூஜை(மஞ்சள் பிள்ளையார்)ஒவ்வொரு பூஜைக்கும் முன்னால் இந்த விக்னேச் ’வர பூஜையை செய்ய வேண்டும். (பக்கம் 29 முதல் பக்கம் 39 ம் பக்கம் வரை)(தியானம் + ப்ராணாயாமம் + ஸங்கல்பம் + ப்ரார்த்தனை + அர்ச்சனை + நிவேதன மந்த்ரங்கள் + தீபாராதனை + நமஸ்காரம்)2. ஸ்ரீவிக்னேச்’வர பூஜை(மஞ்சள் பிள்ளையார்)ஒவ்வொரு பூஜைக்கும் முன்னால் இந்த விக்னேச்’வர பூஜையை செய்ய வேண்டும். விக்னேச்’வர பூஜைமஞ்சள் பிள்ளையார் பூஜைஇப்பூஜையானது எல்லா ப்ரதான பூஜைகளுக்கும் மற்றும் எல்லா சுபகாரியங்களுக்கும் முதலில், ஆரம்பத்தில் செய்ய வேண்டிய பூஜையாகும்.தீப மந்திரம்(விளக்கை ஏற்றி வைத்து தீபத்தை பார்த்து இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)தீபஜோதி: பரம் ப்ரஹ்மதீபஜ்யோதிர் ஜனார்த்தன:தீபோ மே ஹரது பாபம்தீபஜ்யோதிர் நமோஸ்து தேஆசமனம்(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி, சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)ஓம் அச்யுதாய நம:ஓம் அனந்தாய நம:ஓம் கோவிந்தாய நம:அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)1. கேச ’வ வலக்கைக் கட்டைவிரல் வலக்கன்னம்2. நாராயண வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்3. மாதவ வலக்கை மோதிர விரல், வலக்கண்4. கோவிந்த வலக்கை மோதிரவிரல், இடக்கண்5. விஷ்ணு வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி6. மதுஸூதன வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி7. த்ரிவிக்ரம வலக்கை சிறுவிரல், வலது காது8. வாமன வலக்கை சிறுவிரல், இடது காது9. ஸ்ரீதர வலக்கை நடுவிரல், வலதுதோள்10. ஹ்ருஷீகேச ’ வலக்கை நடுவிரல், இடதுதோள்11. பத்மநாப நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)12. தாமோதர ஐந்து விரல்களும் சேர்த்து, தலை.தியானம்வலது கையில் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக்கொண்டு கீழ்க் கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.சு’க்லாம்பரதரம் விஷ்ணும்ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்ப்ரஸன்ன வதனம் த்யாயேத்ஸர்வ விக்னோபசா ’ ந்தயேப்ராணாயாமம்(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்வரேண்யம், பர்க்கோதேவஸ்யதீமஹி, தியோ யோ ந: ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்(வலது காதை தொடவும்.)ஸங்கல்பம்வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக் கொண்டு, இடது கை மேல் வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு அக்ஷதையை வடக்கே போடவும்.மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’ வர ப்ரீத்யர்த்தம், கரிஷ்யமாணஸ்யகர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம்ஆதௌ விக்னேச்’வர பூஜாம் கரிஷ்யேகுறிப்பு: மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கூம்பு வடிவில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.பிரார்த்தனை(மஞ்சள் பிள்ளையாருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி ஆவாஹனம் (விக்னேஸ்வரரை வரவழைத்தல்) செய்து, புஷ்பம், அக்ஷதையை போடவும்.) வேத மந்திரங்களை ஸ்வரத்துடன் சொல்பவர்கள் மட்டுமே கீழ்கண்ட மந்திரங்களைச் சொல்லவும்.கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹேகவிம் கவீநாம் உபமச்’ரவஸ்தமம்ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதஆந: ச்’ ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதனம்அஸ்மின் ஹரித்ராபிம்பேவிக்னேச்’ வரம் த்யாயாமி,விக்னேச்’வரம் ஆவாஹயாமி(மற்றவர்கள் கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லலாம்.)அகஜானன பத்மார்க்கம்கஜானனம் அகர்நிஷம்அனேகதம்தம் பக்தானாம்ஏகதந்தம் உபாஸ்மஹேஅஸ்மின் ஹரித்ராபிம்பே விக்னேச்’வரம்த்யாயாமி, விக்னேச்’வரம் ஆவாஹயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு புஷ்பம், அக்ஷதை போட்டு கீழ்கண்ட மந்திரம் சொல்லி பிள்ளையாரை ஆசனத்தில் அமர்த்தியதாக பாவனை செய்ய வேண்டும்.)விக்னேச்’வராய நம:ஆஸனம் ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையாரின் திருவடிகளை அலம்புதல். உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் திருவடிக்கு நேராகக் காட்டி அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)விக்னேச்’ வராய நம:பாத்யம் ஸமர்ப்பயாமி(கீழ்கண்ட மந்திரம் சொல்லி உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் கைகளில் அளிப்பதுபோல பாவனை செய்து தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)விக்னேச்’வராய நம:அர்க்யம் ஸமர்ப்பயாமி(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தெய்வத்தின் வாய்க்கு நேராக காட்டி அர்க்யபாத்திரத்தில் விடவும்.)விக்னேச் ’வராய நம:ஆசமனீயம் ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையார் மீது தீர்த்தத்தை தெளிக்கவும்)விக்னேச் ’ வராய நம:ஸ்நானம் ஸமர்ப்பயாமி(அர்க்யபாத்திரத்தில் ஜலம் விடவும்)விக்னேச் ’வராய நம: ஸ்நாநாநந்தரம்ஆசமனீயம் ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு வஸ்த்ரம் அளிப்பது போல் அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)விக்னேச்’ வராய நம:வஸ்த்ரார்த்தம் அக்ஷதான்ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு பூணூலுக்கு பதிலாக அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்.)விக்னேச் ’ வராய நம: யக்ஞோபவீதார்த்தம் அக்ஷதான்ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு நெற்றியில் சந்தனம் வைக்கவும்)விக்னேச் ’ வராய நம: கந்தாம்ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு குங்குமம் வைக்கவும்.)விக்னேச் ’வராய நம: கந்தோபரிகுங்குமம் ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு அக்ஷதையை சமர்ப்பிக்கவும்.)விக்னேச்’வராய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கவும்.)விக்னேச்’ வராய நம:புஷ்பை: பூஜயாமிஅர்ச்சனை(மஞ்சள் பிள்ளையாரை பல பெயர்களில் புஷ்பங்களால் அர்ச்சனை செய்யவும்.)ஓம் ஸுமுகாய நம:ஓம் ஏகதந்தாய நம:ஓம் கபிலாய நம:ஓம் கஜகர்ணகாய நம:ஓம் லம்போதராய நம:ஓம் விகடாய நம:ஓம் விக்னராஜாய நம:ஓம் விநாயகாய நம:ஓம் தூமகேதவே நம:ஓம் கணாத்யக்ஷாய நம:ஓம் பாலசந்த்ராய நம:ஓம் கஜானனாய நம:ஓம் வக்ரதுண்டாய நம:ஓம் சூ’ர்ப்ப கர்ணாய நம:ஓம் ஹேரம்பாய நம:ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:ஓம் மஹாகணபதயே நம:நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி. (அக்ஷதை, புஷ்பம், போடவும்.)தூபதீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.(அக்ஷதை, புஷ்பம் போடவும்.)நிவேதன மந்த்ரங்கள்(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பாளத்தில் வைத்து கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)ஓம் பூர்புவஸ்ஸுவ:(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)தத்ஸவிதுர்வரேண்யம்பர்கோதேவஸ்ய தீமஹிதியோ யோ ந: ப்ரசோதயாத்(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.)(பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)(காலையில் பூஜை செய்தால்)தேவஸவித: ப்ரஸுவஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி(மாலையில் பூஜை செய்தால்)தேவஸவித: ப்ரஸுவருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமிஅம்ருதமஸ்துஅம்ருதோபஸ்தரணமஸி(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமிக்கு அன்னம் ஊட்டுவது போல் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)ஓம் ப்ராணாய ஸ்வாஹா,ஓம் அபானாய ஸ்வாஹா,ஓம் வ்யாநாய ஸ்வாஹா,ஓம் உதானாய ஸ்வாஹா,ஓம் ஸமானாய ஸ்வாஹா,ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,ப்ரஹ்மணீம ஆத்மா அம்ருதத்வாய, விக்னேச்’ வராய நம: நாளீகேர கண்ட த்வயம், கதலீபலம் நிவேதயாமி.மத்யே மத்யே பானீயம்ஸமர்ப்பயாமி.(தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)அம்ருதாபிதாநமஸி(ஆசமனீயம் ஸமர்ப்பயாமி)(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து இரண்டு முறை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)பூகீபல ஸமாயுக்தம்நாகவல்லீ தளைர்யுதம்கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம்தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்விக்னேச் ’ வராய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி (வெற்றிலை பாக்கு தாம்பூலத்தில் சிறிதளவு ஜலம் விட்டு நிவேதனம் செய்யவும்.)தீபாராதனைவிக்னேச்’வராய நம:கற்பூர நீராஜனம் ஸந்தர்சயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டவும்.)ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி(புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பிக்கவும்.)ப்ராத்தனைவக்ரதுண்ட மஹாகாயஸூர்யகோடி ஸமப்ரபஅவிக்னம் குரு மே தேவஸர்வகார்யேஷு ஸர்வதாவிக்னேச் ’ வராய நம: ப்ரார்த்தயாமி(என்று புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பித்து நமஸ்காரம் செய்யவும்)3. ப்ரதான பூஜைபிரார்த்தனைசு’க்லாம்பரதரம் ........ சா’ந்தயே (பக்கம் 12)சு’க்லாம்பரதரம் விஷ்ணும்ச ’சி’ வர்ணம் சதுர்புஜம்ப்ரஸன்ன வதனம் த்யாயேத்ஸர்வ விக்னோபசா ’ந்தயே