உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்வர்ண கவுரீ விரத மஹிமை

ஸ்வர்ண கவுரீ விரத மஹிமை

ஸ்வர்ண கவுரீ விரத மஹிமைஸூத பவுராணிகர் சொல்கிறார்: இந்த விரதத்தைப்பற்றி ஸ்கந்த பகவான், சிவபெருமானை வினவ, பரமேசுவரன் அருளிச் செய்ததாவது:  முன்னொரு காலத்தில் ஸரஸ்வதீ நதிக்கரையில் விமலம் என்றொரு பட்டணமுண்டு. அங்கு சந்திரப்பிரபன் என்றொரு அரசன் வாழ்ந்து வந்தான். அவனுக்குப் பட்டமஹிஷிகள் இருவர் உண்டு. அவர்களில் முதல் மனைவியிடம் அவனுக்கு ஆசை அதிகம்.அவன் ஒருநாள் வேட்டையாடுவதற்காகக் காட்டிற்குச் சென்றான். அங்கு வெகுநேரம் வேட்டையாடியபின் களைப்புற்று, தண்ணீருள்ள ஒரு தடாகத்தைத் தேடியலைந்து சென்றான். அங்கே அப்ஸரப் பெண்கள் ஒரு விரதத்தை அனுஷ்டித்து வந்தார்கள். அவர்களை, ‘இது என்ன விரதம்?’ என்று கேட்க, அவர்களும் ‘இது ஸ்வர்ணகவுரீ விரதம் ’ என்று பதிலுரைத்தனர்.“இந்த விரதம் எப்போது எப்படிச் செய்யவேண்டும்? என்ன பயன்?” என்று அரசன் கேட்க, அவர்கள், “ஆவணி மாதம் சுக்லபக்ஷ த்ருதீயை அன்று இந்த விரதத்தை, கவுரீ தேவியைக் குறித்து 16 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும்; இதனால் சகல சுகமும் உண்டாகும்” என்று சொல்லி அதன் முறையைக் கூறினார்கள்.அவர்கள் கூறிய முறையை அரசன் அறிந்து, 16 முடிகள் உள்ள தோரகத்தை (சரடை) வலது கையில் கட்டிக் கொண்டான். பிறகு, விரதத்தை அங்கேயே அனுஷ்டித்து அரண்மனைக்கு வந்தான். அங்கு தன் மனைவிகளிடம் தான் செய்த கவுரீ விரத பூஜையைப் பற்றி விவரித்தான்.இதைக் கேட்டுச் சினம் கொண்ட இவனுடைய முதல் மனைவி, அவன் கையில் கட்டியிருந்த நோன்புக் கயிற்றை அறுத்து வெளியில் தோட்டத்திலிருந்து ஒரு உலர்ந்த மரத்தின் மீது எறிந்துவிட்டாள். ஆனால் அந்த கயிறுபட்ட மாத்திரத்தில் அந்த மரம் துளிர்க்க ஆரம்பித்து விட்டது.இதைப் பார்த்துக் கொண்டிருந்த இரண்டாவது மனைவி வியப்பும், வெட்கமும் கொண்டு ஓடிப்போய், அந்த நோன்புக் கயிற்றை எடுத்துத் தன் கையில் கட்டிக்கொண்டாள். அதைக் கட்டிக்கொண்ட உடனே கணவனுக்கு மிகவும் அன்பு மனைவியாகி விட்டாள்.முதல் மனைவி, தான் செய்த தவறுக்காகக் கணவனால் ஒதுக்கப்பட்டு வனம் சென்று, தேவியைத் துதித்துக் கொண்டே முனிவர்களின் ஆசிரமங்களை சுற்றி வந்தாள். அங்கு முனிவர்களால், “பாவியே! இங்கே தங்காதே ” என்று விரட்டப்பட்டாள். பிறகு இங்கும், அங்கும் திரியும்போது ஒரு தடாகத்தைக் கண்டாள். அதன் கரையில் உள்ள மரத்தின்கீழ் ஒரு அழகிய வனதேவதை பூஜை செய்வதைக் கண்டு அருகில் செல்ல, அவளும் இவளை அங்கிருந்து விரட்டினாள்.ஆயினும், இவள் எந்த வேளையிலும் கவுரீ தேவியைத் தியானம் செய்துவந்த காரணத்தால், கவுரீதேவி அருள்கூர்ந்து இவளுக்கு எதிரில் வந்து தரிசனம் தந்தாள். தேவியைப் பலவகையில் துதி செய்து, கவுரீ பூஜையையும் விரதத்தையும் அனுஷ்டித்து, தேவியின் அனுக்ரஹம் பெற்று, கணவனால் அன்புடன் வரவேற்கப்பட்டு, சகல சுகங்களையும், அனுபவித்து வந்தாள்.எனவே, இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்களுக்குச் செல்வமும் சுகமும் வளரும். பகைவர் நீங்குவர், இவ்வுலகில் எல்லா போகங்களையும், அனுபவித்தபின் ஸாயுஜ்ய முக்தியும் இவர்களுக்கு ஏற்படும். (ஸ்காந்த புராணத்திலிருந்து).ஸ்வர்ணகவுரீ பூஜைகாலம்: ஸ்வர்ண கவுரீ விரதத்தை பிள்ளையார் சதுர்த்திக்கு முதல் நாள் அதாவது ஆவணி மாதம் சுக்லபக்ஷ த்ருதீயை அன்று அனுஷ்டிக்கவும். இந்த விரதத்தை பெண்மணிகள் தங்கள் மாங்கல்ய பலத்தை வேண்டியும், பாதிவ்ரத்ய ரக்ஷணத்தை வேண்டியும், கடைப்பிடிப்பார்கள்.1. பூஜைக்கு வேண்டிய பொருட்கள் பட்டியல் (பக்கம்  6, பக்கம் 7ல் பார்க்கவும்.) இத்துடன் காதோலை, கருகுமணி தயார் செய்து கொள்ளவும்.பொதுவாக பூஜைக்கு தேவையான பொருட்கள்1. மஞ்சள் பொடி2. குங்குமம்3. சந்தனம்4. பூமாலை5. உதிரிப்பூக்கள்6. வெற்றிலை, பாக்கு7. ஊதுபத்தி8. சாம்பிராணி9. பஞ்சு (திரிக்காக)10. நல்லெண்ணெய்11. கற்பூரம்12. வெல்லம்13. மாவிலை14. வாழைப்பழம்15. அரிசி16. தேங்காய்17. தயிர்18. தேன்19. தீப்பெட்டி20. பூணூல்21. வஸ்த்ரம்22. அக்ஷதை (பச்சரிசியுடன் மஞ்சள் பொடி கலந்தது)23. பஞ்சாம்ருதம் (வாழைப்பழம், பால், தேன், நெய், சர்க்கரை, கலந்தது)24. கோலப்பொடி / அரிசி மாவு25. பஞ்சகவ்யம்:1. பசுவின் சிறுநீர் (கோமியம்), 2. பசுவின் சாணம், 3. பால், 4. தயிர், 5. நெய்  இவை ஐந்தும் சேர்ந்த கலவையே பஞ்ச கவ்யமாகும்.26. திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால்.குறிப்பு: ஹோமங்களுக்கு நெய் உபயோகிப்பது உத்தமம். ஒரு சில பூஜைகளில் நவதான்னியங்கள், கருகு மணிமாலை, பனைஓலை, மஞ்சள் கொத்து, ஏலக்காய் பொடி, கண் மை, அகல் விளக்கு, மூங்கில் தட்டு, பஞ்சினால் செய்த மாலை, போன்ற சில விசேஷ பொருட்கள் தேவைப்படுகின்றன. அந்தந்த பூஜையை செய்யும்போது அதற்கு தேவையானவற்றை முதலிலேயை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.மாற்றுப் பொருள்கள்பூஜைக்கு உரிய சில பொருள்கள் கிடைக்காமலிருக்கலாம். இந்த நிலையில் ஒரு பொருளுக்குப்பதிலாக இந்தப் பொருள்தான் மாற்றுப் பொருள் என்பது விரத கல்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை.1. தேனுக்குப் பதிலாக வெல்லம்,2. வஸ்த்ரம், ஆபரணம், சத்ரம், சாமரம், முதலிய ராஜோபசாரங்களுக்குப் பதிலாக அக்ஷதை (அ) புஷ்பம்.2. கலசத்தை வைத்து மலர்களால் அலங்கரித்து பூஜை செய்யவும்.3. நைவேத்ய பொருட்கள்: 16 தோசை (கருகாது இருக்க வேண்டும். அதாவது வெள்ளை தோசையாக இருக்க வேண்டும்), சாதம், சர்க்கரை பொங்கல், பாயஸம், வடை, இட்லி, அப்பம், தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு.4. குங்குமத்தாலும், தாமரை மலர்கள் மற்றும் இதழ்களாலும் அர்ச்சிப்பது விசேஷம்.5. தோரக்ரந்தி பூஜையில் மஞ்சள் தடவிய 16 முடிச்சுகள் போட்டு மஞ்சள் சரடு தயார் செய்து கொள்ள வேண்டும்.குறிப்பு: இந்த பூஜைக்கு தேங்காய்க்கு பதிலாக ஒரு மஞ்சள் துணியில் கொஞ்சம் மணலை வைத்து, அதை மூட்டை போல் கட்டி, இதனை ஆவாஹனம் செய்ய வேண்டும்.1. பூர்வாங்க பூஜைகள்முதலில் பக்கம் 10 ம் பக்கம் முதல் பக்கம் 14ம் பக்கம் வரை உள்ள (தீபம் + ஆசமனம் + குரு த்யானம் + கணபதி தியானம் ஸங்கல்பம் +ஆஸன பூஜை + ஆத்ம பூஜை) பூர்வாங்க பூஜைகளை செய்யவும்.1. பூர்வாங்க பூஜை1. தீப மந்திரம்(விளக்கை ஏற்றி வைத்து, தீபத்தைப் பார்த்து, இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)தீபஜ்யோதி: பரம் ப்ரஹ்மதீபஜ்யோதிர் ஜனார்த்தன:தீபோ ஹரது மே பாபம்தீபஜ்யோதிர் நமோஸஸ்து தே2. ஆசமனம்(நமது வலதுகை விரல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தெய்வம் குடியிருப்பதாக ஐதீகம். இதே போல் நமது அங்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தெய்வம் வசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆசமனம், அங்கவந்தனம் ஆகியன செய்தால், நமது உள்ளமும், உடலும் சுத்தமாகிறது என்று சாஸ்திரங்கள் கூறுவதை நாம் உணர வேண்டும். எல்லா நித்ய கர்மாக்களுக்கும், வைதிக கர்மாக்களுக்கும் ஆசமனம், அங்க வந்தனம் இன்றியமையாததாகும்.)(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங் கையில் விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)ஓம் அச்யுதாய நம:ஓம் அனந்தாய நம:ஓம் கோவிந்தாய நம:அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)(ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசத்துக் கொள்ள வேண்டும்.)1. கேச ’வ  வலக்கைக் கட்டை விரல் வலக்கன்னம்2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்3. மாதவ  வலக்கை மோதிர விரல் வலக்கண்4. கோவிந்த  வலக்கை மோதிர விரல் இடக்கண்5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி7. த்ரிவிக்ரம்  வலக்கை சிறுவிரல், வலது காது8. வாமன  வலக்கை சிறுவிரல் இடது காது9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்10. ஹ்ருஷீகேச ’ வலக்கை நடுவிரல், இடது தோள்11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலைகுரு த்யானம்குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு:குருர்தேவோ மஹேச் ’ வர:குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்மதஸ்மை ஸ்ரீகுரவே நம:4. கணபதி தியானம்இரண்டு கைகளிலும் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.சு’க்லாம்பரதரம் விஷ்ணும்ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்ப்ரஸன்ன வதனம் த்யாயேத்ஸர்வ விக்னோபசா ’ந்தயே5. ப்ராணாயாமம்(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கையிலும், மூச்சை மெதுவாக வெளியிடும் போதும், இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாகச் சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ:, ஓம்மஹ:, ஓம் ஜன:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம்தத்ஸவிதுர் வரேண்யம், பர்க்கோதேவஸ்ய தீமஹி, தியோ யோ ந:ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ்ஸுவரோம்(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)6. ஸங்கல்பம்(வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக்கொண்டு, இடது கையுடன் சேர்த்து வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு, அக்ஷதையை வடக்கே போடவும்.)மமோபாத்த ஸமஸ்த துரித, க்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம்,கரிஷ்யமாணஸ்ய கர்மண:நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ விக்னேச்’வர பூஜாம் கரிஷ்யே7. ஆஸன பூஜை(பூஜை ஆரம்பிக்கும் முன் நாம் அமரும் ஆசனம் / பலகையை சுத்தப்படுத்துவதற்காக, கீழ்க்காணும் மந்திரங்களை சொல்லி தீர்த்தம் தெளித்து பிறகு அமர்ந்து கொள்ளவும்.)ப்ருத்வி த்வயா த்ருதா லோகாதேவி த்வம் விஷ்ணுனா த்ருதாத்வம் ச தாரய மாம் தேவிபவித்ரம் குரு ச ஆஸனம்8. ஆத்ம பூஜை(மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை தியானித்து கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி தலையில் அக்ஷதையைப் போட்டுக்கொள்ளவும்.)தேஹோ தேவாலய: ப்ரோக்த:ஜீவோ தேவ: ஸநாதன:த்யஜேத் அஜ்ஞான நிர்மால்யம்ஸோஹம்பாவேன பூஜயேத்2.  விக்னேச்’வர பூஜை(மஞ்சள் பிள்ளையார்)ஒவ்வொரு பூஜைக்கும் முன்னால் இந்த விக்னேச்வர பூஜையை செய்ய வேண்டும். (பக்கம் 29 பக்கம் முதல் பக்கம் 39ம் பக்கம் வரை)(தியானம் + ஸங்கல்பம் + ப்ரார்த்தனை + அர்ச்சனை + நிவேதன மந்த்ரங்கள் + தீபாராதனை +நமஸ்காரம்.)விக்னேச்’வர பூஜைமஞ்சள் பிள்ளையார் பூஜைஇப்பூஜையானது எல்லா ப்ரதான பூஜைகளுக்கும் மற்றும் எல்லா சுபகாரியங்களுக்கும் முதலில், ஆரம்பத்தில் செய்ய வேண்டிய பூஜையாகும்.தீப மந்திரம்(விளக்கை ஏற்றி வைத்து தீபத்தை பார்த்து இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)தீபஜோதி: பரம் ப்ரஹ்மதீபஜ்யோதிர் ஜனார்த்தன:தீபோ மே ஹரது பாபம்தீபஜ்யோதிர் நமோஸ்து தேஆசமனம்(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு  கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி, சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)ஓம் அச்யுதாய நம:ஓம் அனந்தாய நம:ஓம் கோவிந்தாய நம:அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)1. கேச ’வ  வலக்கைக் கட்டைவிரல் வலக்கன்னம்2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்3. மாதவ  வலக்கை மோதிர விரல், வலக்கண்4. கோவிந்த  வலக்கை மோதிரவிரல், இடக்கண்5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி7. த்ரிவிக்ரம  வலக்கை சிறுவிரல், வலது காது8. வாமன வலக்கை சிறுவிரல், இடது காது9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்10. ஹ்ருஷீகேச ’  வலக்கை நடுவிரல், இடதுதோள்11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலை.தியானம்வலது கையில் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக்கொண்டு கீழ்க் கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.சு’க்லாம்பரதரம் விஷ்ணும்ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்ப்ரஸன்ன வதனம் த்யாயேத்ஸர்வ விக்னோபசா ’ ந்தயேப்ராணாயாமம்(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்வரேண்யம், பர்க்கோதேவஸ்யதீமஹி, தியோ யோ ந: ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்(வலது காதை தொடவும்.)ஸங்கல்பம்வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக் கொண்டு, இடது கை மேல் வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு அக்ஷதையை வடக்கே போடவும்.மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’ வர ப்ரீத்யர்த்தம், கரிஷ்யமாணஸ்யகர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம்ஆதௌ விக்னேச்’வர பூஜாம் கரிஷ்யேகுறிப்பு: மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கூம்பு வடிவில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.பிரார்த்தனை(மஞ்சள் பிள்ளையாருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி ஆவாஹனம் (விக்னேஸ்வரரை வரவழைத்தல்) செய்து, புஷ்பம், அக்ஷதையை போடவும்.) வேத மந்திரங்களை ஸ்வரத்துடன் சொல்பவர்கள் மட்டுமே கீழ்கண்ட மந்திரங்களைச் சொல்லவும்.கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹேகவிம் கவீநாம் உபமச்’ரவஸ்தமம்ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதஆந: ச்’ ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதனம்அஸ்மின் ஹரித்ராபிம்பேவிக்னேச்’ வரம் த்யாயாமி,விக்னேச்’வரம் ஆவாஹயாமி(மற்றவர்கள் கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லலாம்.)அகஜானன பத்மார்க்கம்கஜானனம் அகர்நிஷம்அனேகதம்தம் பக்தானாம்ஏகதந்தம் உபாஸ்மஹேஅஸ்மின் ஹரித்ராபிம்பே விக்னேச்’வரம்த்யாயாமி, விக்னேச்’வரம் ஆவாஹயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு புஷ்பம், அக்ஷதை போட்டு கீழ்கண்ட மந்திரம் சொல்லி பிள்ளையாரை ஆசனத்தில் அமர்த்தியதாக பாவனை செய்ய வேண்டும்.)விக்னேச்’வராய நம:ஆஸனம் ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையாரின் திருவடிகளை அலம்புதல். உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் திருவடிக்கு நேராகக் காட்டி அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)விக்னேச்’ வராய நம:பாத்யம் ஸமர்ப்பயாமி(கீழ்கண்ட மந்திரம் சொல்லி உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் கைகளில் அளிப்பதுபோல பாவனை செய்து தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)விக்னேச்’வராய நம:அர்க்யம் ஸமர்ப்பயாமி(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தெய்வத்தின் வாய்க்கு நேராக காட்டி அர்க்யபாத்திரத்தில் விடவும்.)விக்னேச் ’வராய நம:ஆசமனீயம் ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையார் மீது தீர்த்தத்தை தெளிக்கவும்)விக்னேச் ’ வராய நம:ஸ்நானம் ஸமர்ப்பயாமி(அர்க்யபாத்திரத்தில் ஜலம் விடவும்)விக்னேச் ’வராய நம: ஸ்நாநாநந்தரம்ஆசமனீயம் ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு வஸ்த்ரம் அளிப்பது போல் அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)விக்னேச்’ வராய நம:வஸ்த்ரார்த்தம் அக்ஷதான்ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு பூணூலுக்கு பதிலாக அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்.)விக்னேச் ’ வராய நம: யக்ஞோபவீதார்த்தம் அக்ஷதான்ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு நெற்றியில் சந்தனம் வைக்கவும்)விக்னேச் ’ வராய நம: கந்தாம்ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு குங்குமம் வைக்கவும்.)விக்னேச் ’வராய நம: கந்தோபரிகுங்குமம் ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு அக்ஷதையை சமர்ப்பிக்கவும்.)விக்னேச்’வராய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கவும்.)விக்னேச்’ வராய நம:புஷ்பை: பூஜயாமிஅர்ச்சனை(மஞ்சள் பிள்ளையாரை பல பெயர்களில் புஷ்பங்களால் அர்ச்சனை செய்யவும்.)ஓம் ஸுமுகாய நம:ஓம் ஏகதந்தாய நம:ஓம் கபிலாய நம:ஓம் கஜகர்ணகாய நம:ஓம் லம்போதராய நம:ஓம் விகடாய நம:ஓம் விக்னராஜாய நம:ஓம் விநாயகாய நம:ஓம் தூமகேதவே நம:ஓம் கணாத்யக்ஷாய நம:ஓம் பாலசந்த்ராய நம:ஓம் கஜானனாய நம:ஓம் வக்ரதுண்டாய நம:ஓம் சூ’ர்ப்ப கர்ணாய நம:ஓம் ஹேரம்பாய நம:ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:ஓம் மஹாகணபதயே நம:நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி. (அக்ஷதை, புஷ்பம், போடவும்.)தூபதீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.(அக்ஷதை, புஷ்பம் போடவும்.)நிவேதன மந்த்ரங்கள்(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பாளத்தில் வைத்து கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)ஓம் பூர்புவஸ்ஸுவ:(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)தத்ஸவிதுர்வரேண்யம்பர்கோதேவஸ்ய தீமஹிதியோ யோ ந: ப்ரசோதயாத்(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.)(பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)(காலையில் பூஜை செய்தால்)தேவஸவித: ப்ரஸுவஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி(மாலையில் பூஜை செய்தால்)தேவஸவித: ப்ரஸுவருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமிஅம்ருதமஸ்துஅம்ருதோபஸ்தரணமஸி(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமிக்கு அன்னம் ஊட்டுவது போல் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)ஓம் ப்ராணாய ஸ்வாஹா,ஓம் அபானாய ஸ்வாஹா,ஓம் வ்யாநாய ஸ்வாஹா,ஓம் உதானாய ஸ்வாஹா,ஓம் ஸமானாய ஸ்வாஹா,ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,ப்ரஹ்மணீம ஆத்மா அம்ருதத்வாய, விக்னேச்’ வராய நம: நாளீகேர கண்ட த்வயம், கதலீபலம் நிவேதயாமி.மத்யே மத்யே பானீயம்ஸமர்ப்பயாமி.(தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)அம்ருதாபிதாநமஸி(ஆசமனீயம் ஸமர்ப்பயாமி)(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து இரண்டு முறை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)பூகீபல ஸமாயுக்தம்நாகவல்லீ தளைர்யுதம்கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம்தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்விக்னேச் ’ வராய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி (வெற்றிலை பாக்கு தாம்பூலத்தில் சிறிதளவு ஜலம் விட்டு நிவேதனம் செய்யவும்.)தீபாராதனைவிக்னேச்’வராய நம:கற்பூர நீராஜனம் ஸந்தர்சயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டவும்.)ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி(புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பிக்கவும்.)ப்ராத்தனைவக்ரதுண்ட மஹாகாயஸூர்யகோடி ஸமப்ரபஅவிக்னம் குரு மே தேவஸர்வகார்யேஷு ஸர்வதாவிக்னேச் ’ வராய நம: ப்ரார்த்தயாமி(என்று புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பித்து நமஸ்காரம் செய்யவும்)3. ப்ரதான பூஜைத்யானம்சு’க்லாம்.............சா ’ந்தயே (பக்கம் 12)சு’க்லாம்பரதரம் விஷ்ணும்ச ’சி’ வர்ணம் சதுர்புஜம்ப்ரஸன்ன வதனம் த்யாயேத்ஸர்வ விக்னோபசா ’ந்தயே


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !