அவலூர்பேட்டையில் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :2623 days ago
அவலூர்பேட்டை:அவலூர்பேட்டை மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அவலூர்பேட்டை கடைவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாத அமாவாசை யை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது. இரவு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது, பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் அறங்காவலர் குழு தலைவர் சகாதேவன் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.