வில்லியனூரில் திருக்காமீஸ்வரர் கோவிலில், சூரசம்ஹார விழா
ADDED :2679 days ago
வில்லியனூர்:வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில், சூரசம்ஹார விழாவில், சிங்கமுக சூரன் வதம் நடந்தது.வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில், சூரசம்ஹார விழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடந்து வரும்
விழாவில், 11ம் தேதி யானைமுக சூரன், நேற்று சிங்கமுக சூரன் வதம் நடந்தது. நேற்று 6ம் நாள் திருவிழாவாக சூரசம்ஹாரம் நடந்தது.