உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புல்லாணி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

புல்லாணி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருப்புல்லாணி: திருப்புல்லாணியில் உள்ள புல்லாணி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.கடந்த நவ 13 அன்று முதல்கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. காப்புகாட்டுதல், அனுக்ஞை விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்டவைகள் நடந்தது.நேற்று (நவம்., 14ல்) காலை 10 மணியளவில் கோயில் கோபுர கலசத்தில் பாபு சாஸ்திரிகள் தலைமையிலான குழுவினர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.மூலவர் புல்லாணி மாரியம்மனுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சந்தனக் காப்பு அலங்காரத்தில் காணப்பட்டார். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !