இரணியூர் ஆட்கொண்டநாதர் கோயிலில் குபேர பூஜை
ADDED :2655 days ago
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவி கோயிலில் குபேர பூஜை நடந்தது. நகரத்தார் கோயிலான இங்கு ஆண்டுக்கு ஒரு முறை வளர்பிறை அஷ்டமி திதியில் குபேர பூஜை நடப்பது வழக்கம். நேற்று காலை 7:00 மணிக்கு ஆகர்ஷன லெட்சுமி குபேர யாகம் துவங்கியது. தொடர்ந்து லெட்சுமி குபேர சிறப்பு பூஜை மற்றும் நவக்கிரக அபிஷேகம் நடந்தது. பின்னர் குபேரருக்கு தங்க,வெள்ளி நாணயங்களால் சொர்ணாபிஷேகம் நடந்தது. அடுத்து யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி குபேரருக்கு புனிதநீரால் அபிஷேகம் நடந்தது. மூலவர் தங்கக் கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் உற்ஸவர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.