உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விலங்கல்பட்டில் ஐயப்பன் சுவாமி கன்னி பூஜை

விலங்கல்பட்டில் ஐயப்பன் சுவாமி கன்னி பூஜை

நடுவீரப்பட்டு:விலங்கல்பட்டில் ஐயப்பன் சுவாமிகளின் கன்னி பூஜை விழா நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டு கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று (டிசம்., 16ல்) மதியம் ஐயப்பன் சுவாமிகளின் கன்னி பூஜை நடந்தது.

விழாவை முன்னிட்டு நேற்று (டிசம்., 16ல்) காலை 10:00 மணிக்கு மாரியம்மன் கோவிலில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதனை தொடர்ந்து சபரி மலைக்கு மாலை அணிந்த பக்தர்கள் ஐயப்பனை வழிபட்டு, கன்னி பூஜை நடத்தினர். ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !