தேவிபட்டினம் நவபாஷாணத்தில் கடல் நீர் மட்டம் உயர்வு
ADDED :2585 days ago
தேவிபட்டினம் :பெய்ட்டி புயல் தாக்கம் காரணமாக தேவிப்பட்டினம் நவபாஷாணத்தில் கடல் நீர் மட்டம் உயர்ந்தது.
தேவிபட்டினத்தில் பிரசித்திபெற்ற நவபாஷாணம் உள்ளது. முன்னோர்களுக்கு தர்பணம் உட்பட பல்வேறு தோஷ நிவர்த்திகளுக்கு பரிகார பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நவபாஷாணம் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலுக்குள் அமைந்துஉள்ள நவகிரகங்களை சுற்றிவந்து வழிபட்டு செல்கின்றனர். பெய்ட்டி புயல் தாக்கத்தால் கடந்த சில நாட்களாக நவபாஷாணத்தில் கடல் நீர்மட்டம் உயர்ந்து நவகிரகங்கள் தண்ணீரில் மூழ்கின. நவகிரகங்களை தரிசனம் செய்வதில் பக்தர்கள் சிரமமடைந்தனர்.