14 ஆண்டுகளாக ஓடாத தேர்
ADDED :2501 days ago
திருமங்கலம் : திருமங்கலம் அருகே சிந்துபட்டி சவுந்திரராஜபெருமாள் கோயிலில் 14 ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படும் தேரை சீரமைத்து இயக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.அவர்கள் கூறியதாவது: புதிய தேரை அமைக்க அறநிலையத்துறை 10 லட்சம் ரூபாய் வழங்கியது. பழைய தேரில் அச்சு மட்டும் மாற்ற வேண்டி உள்ளது. சீரமைத்து இயக்க வேண்டும் என்றனர்.