பொங்கல் தினத்தில் ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் தரிசனம்
ADDED :2453 days ago
ராமேஸ்வரம்: பொங்கல் விழா யொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று பொங்கல் திருநாள் யொட்டி, அதிகாலை 3:30 மணிக்கு ராமேஸ்வரம் கோயிலில் நடை திறந்து, காலை 4 முதல் 5 மணி வரை சுவாமி சன்னதியில் ஸ்படிகலிங்க பூஜை நடந்தது.
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயில் சன்னதியில் உள்ள பட்டாபிஷேக ராமர், தர்ப்ப சயன ராமர், கல்யாண ஜெகநாதப்பெருமாள் ஆகியோருக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது.
* உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
* ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் பொங்கல் வைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.மஞ்ச மாதாவிற்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னதானம் நடந்தது.உலகநன்மைக்கான கூட்டுவழிபாடு நடந்தது.
* சாயல்குடி கைலாசநாதர் சமேத மீனாட்சியம்மன் கோயிலில் பொங்கலை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
* சிக்கல் அருகே கொத்தங்குளம் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி சமேத சுந்தரராஜப்பெருமாள் கோயிலில் பொங்கலை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
* சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சனேயர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பொங்கலிட்டு வழிபாடு நடந்தது.