உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எந்த நாளில் எதை செய்வது சிறப்பு!

எந்த நாளில் எதை செய்வது சிறப்பு!

காலண்டரில் பார்த்து இருப்பீர்கள் மேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள், சம நோக்கு நாள் என்று அன்றைய தேதியில் குறிப்பிட்டு இருப்பார்கள். அதன் படி என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

மேல் நோக்கு நாள்  ↑ : உப்பரிகை, கொடிமரம், மதில், பந்தல் ஆரம்பிக்கவும், நெல், ராகி, வாழை, கரும்பு  பயிர்களும், விருட்சங்கள் உண்டாக்க உத்தமம்.

கீழ் நோக்கு நாள் ↓ : குளம், கிணறு, களஞ்சியம், வேலி இவைகள் ஆரம்பிக்கவும்,மஞ்சள், வேர்க்கடலை, கிழங்கு வகைகள் வேருக்குரிய செடிகள், கொடிகள்  உண்டாக்க உத்தமம்.

சம நோக்கு நாள் ↔ : நாலு கால் பிராணிகள் கிரயம் வாங்குதல், மேய்த்தல், ஏற்றம், உழவு, வாசக்கால், தூண் முதலியன ஆரம்பிக்க உத்தமம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !