உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கனூர் வக்ரகாளியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருக்கனூர் வக்ரகாளியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருக்கனூர்: காணும் பொங்கலை முன்னிட்டு திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.திருக்கனூர் அடுத்த திருவக்கரையில் சந்திரமவுலீஸ்வரர், வக்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில், ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று அதிகளவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.இந்தாண்டும் காணும் பொங்கலை முன்னிட்டு, தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலுக்கு, இருசக்கர வாகனம், மாட்டு வண்டி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் கூட்டம், கூட்டமாக வந்தனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, கோவில் அருகேயுள்ள மலைப்பகுதி, கல்மரப் பூங்கா, சங்கராபரணி ஆறு உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் குடும்பத்துடன் திரண்டு, காணும் பொங்கலை கொண்டாடினர்.
பொதுமக்களின் வசதிக்காக, விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி, திருக்கனூர் பகுதிகளில் இருந்து திருவக்கரைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு, கண்டமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருக்கனூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் வேலு, குமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !