/
கோயில்கள் செய்திகள் / வீட்டில் வைத்து வழிபாடு செய்யும் சுவாமி சிலைகள் எவ்வளவு உயரம் இருக்க வேண்டும்? பஞ்சலோகம், கருங்கல், மாக்கல் இவற்றில் எது உயர்ந்தது?
வீட்டில் வைத்து வழிபாடு செய்யும் சுவாமி சிலைகள் எவ்வளவு உயரம் இருக்க வேண்டும்? பஞ்சலோகம், கருங்கல், மாக்கல் இவற்றில் எது உயர்ந்தது?
ADDED :5101 days ago
வீட்டில் பூஜை செய்பவரின் வலது கையை முஷ்டியாகப் பிடித்து கட்டை விரலை மட்டும் செங்குத்தாக உயர்த்திப் பிடித்துக் கொள்ள வேண்டும். இதுதான் வீட்டில் வைத்து பூஜிக்கக் கூடிய விக்ரகங்களின் அதிகபட்ச உயரம். உயரம் இதற்குக் கீழேயும் இருக்கலாம். அதிகம் கூடாது என சிற்ப சாத்திரங்கள் கூறுகின்றன. மாக்கல் பூஜைக்கு கூடாது. பொதுவாக கருங்கல் எல்லாவற்றிற்கும் சிறப்பானது.