உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகருணை பாளையம் மங்கள விநாயகர், மகாசக்தி மாரியம்மன் பொங்கல் பூச்சாட்டு விழா

பெரியகருணை பாளையம் மங்கள விநாயகர், மகாசக்தி மாரியம்மன் பொங்கல் பூச்சாட்டு விழா

அவிநாசி: வேலாயுதம்பாளையம் கிராமம் பெரியகருணை பாளையம் பகுதியில் எழுந்தருளியுள்ள மங்கள விநாயகர், ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெற்றது.


அவிநாசி அடுத்த வேலாயுதம்பாளையம் ஊராட்சி பெரியகருணை பாளையத்தில் எழுந்தருளியுள்ள மங்கள விநாயகர், ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா, கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதல், கம்பம் நடுதல், பொரி மாற்றுதல் ஆகிய நிகழ்ச்சியுடன் துவங்கியது.  இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பூவோடு எடுத்து ஆடுதல், அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, அலங்கார பூஜை, கம்பம் சுற்றி ஆடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று அம்மை அழைத்தல், மாவிளக்கு எடுத்தல், பூவோடு எடுத்து ஊர்வலம் வருதல், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாளை  மஞ்சள் நீர் விழா, அம்மனுக்கு அலங்கார பூஜையுடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகிறது. பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு பெரியகருணை பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !