காஞ்சிபுரம் அநேகதங்காவதம் கோவிலில், திருநெறிய தமிழிசை விழா
ADDED :2561 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அநேகதங்காவதம் கோவிலில், தை மாத திருநெறிய தமிழிசை விழா நடந்தது.காஞ்சிபுரம் நால்வர் நற்றமிழ் மன்றம் சார்பில் நடந்த இவ்விழாவில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக உதவி இசை பேராசிரியர் முருக.சுந்தர் ஓதுவார், திருமுறை தேனிசை நிகழ்த்தினார்.காஞ்சிபுரம் சங்கரமடம் ஆஸ்தான வித்வான்கள் பாலவீரராகவன் யாழிசையும், மாதேஸ்வரன் முழவிசையும் நடந்தது.