உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளையில் கன்னித் திருவிழா

புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளையில் கன்னித் திருவிழா

புதுச்சத்திரம்:புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளையில் கன்னித் திருவிழா நடந்தது. புதுச் சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளை சப்த கன்னிகள் கோவிலில், விவசாயம் தழைக்கவும், இளைஞர்கள், இளம் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும், ஆண்டுதோறும் தைமாதம் கன்னித் திருவிழா நடப்பது வழக்கம்.இந்தாண்டு விழா கடந்த மாதம் 17 ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும் இரவு, சப்த கன்னிகள் மற்றும் காவல் தெய்வங்களான சாட்டைக்காரன், அக்னி, கரகம் ஆகிய தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனை நடந்தது. சிறப்பு விழாவான கன்னித்திருவிழா நேற்று (பிப்., 3ல்) நடந்தது. கன்னிகள் மற்றும் காவல் தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு, பம்பை, உடுக்கை, ஆடலுடன் கோவில் குளத்தில் கன்னித் திருவிழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !