உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி பெருமாள் கோயில்களில் ரதசப்தமி விழா

பரமக்குடி பெருமாள் கோயில்களில் ரதசப்தமி விழா

பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ரதசப்தமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நேற்று (பிப்., 12ல்) காலை பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் ஏகாந்தசேவையில் புறப்பாடாகினார். தொடர்ந்து கோயில் முன்புள்ள மண்டபத்தில் எழுந்தருளி மாலை 4:00 மணிக்கு மேல் சிறப்பு தீபாராதனைகள் நிறைவடைந்து,
வீதிவலம் வந்தார். பின்னர் மாலை 6:00 மணிக்கு மேல் கோயிலை அடைந்தார்.

*எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் நேற்று (பிப்., 12ல்) காலை 10:00 மணிக்கு தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து அனைத்து வீதிகளிலும் வலம் வந்த பெருமாளுக்கு ஏராளமான பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபட்டனர். வழிநெடுகிலும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு மேல் பெருமாள் கோயில் வந்தடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !