திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற வெளிநாட்டினர்
ADDED :2459 days ago
திருவண்ணாமலை: வெளிநாட்டு பக்தர்கள், திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றனர். அமெரிக்கா, கனடா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஜெர்மனி போன்ற வெளி நாடுகளை சேர்ந்த பக்தர்கள், 40 பேர் திருவண்ணாமலைக்கு நேற்று முன்தினம் (பிப்., 14ல்) வந்தனர். அவர்கள் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல், கிரிவலம் சென்றனர். பின் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று, அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.