பொக்காபுரம் மாரியம்மன் திருவிழாவில்,27வது ஆண்டு அன்னதான விழா
ADDED :2450 days ago
ஊட்டி:பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவில், 27வது ஆண்டு அன்னதான விழா 9ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடத்தப்படுகிறது.பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் மார்ச் 9ல் இருந்து 11ம் தேதி வரை தேர்த்திருவிழா நடக்கிறது. இதில், ஊட்டியில் உள்ள அம்மன் சேவா சங்கம் சார்பில், 27 வது ஆண்டு அன்னதானம் விழா நடக்கிறது. 3 நாட்களும் தொடர் அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.