உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூலநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

மூலநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

 பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது.

இதனையொட்டி, காலை 9:00 மணிக்கு விநாயகர், மூலநாதர், வேதாம்பிகையம்மன், பொங்கு சனீஸ்வரர், பைரவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து மாலை 4.00 மணிக்கு பிரதோஷ வழிபாடு துவங்கியது. இதில், நந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம், விபூதி, இளநீர் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !