உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரி குமாரசாமிபேட்டையில் மயான கொள்ளை: பூமிதி விழா

தர்மபுரி குமாரசாமிபேட்டையில் மயான கொள்ளை: பூமிதி விழா

தர்மபுரி: சிவராத்திரியை முன்னிட்டு, தர்மபுரி குமாரசாமிபேட்டை அங்காளம்மன் கோவிலில், மயான கொள்ளை நடக்கிறது. இதை முன்னிட்டு, நேற்று (மார்ச்., 3ல்) நடந்த பூ மிதிவிழாவில் ஏராளமான பக்தர்கள், பூ மிதித்தனர்.

தர்மபுரி, குமாரசாமிப்பேட்டை அங்காளம்மன் கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மயானக்கொள்ளை திருவிழா, வரும், 6ல் நடக்கிறது. நேற்று முன்தினம் (மார்ச்., 2ல்), ஹோமங்கள், கொடியேற்றம், அம்மன் வீதி உலா; நேற்று (மார்ச்., 3ல்) காலை, 5:00 மணிக்கு, சக்தி கரக ஊர்வலம், 9:00 மணிக்கு பூமிதி விழா நடந்தது.

இதில், ஏராளமான பக்தர்கள் பூ மிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். நாளை காலை, 9:00 மணிக்கு, பால்குடம் எடுத்தல், இரவு, 9:30 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம்; வரும், 6 அதிகாலை, 1:00 மணிக்கு, முகவெட்டு ஊர்வலம், காலை, 9:30 மணிக்கு அலகு குத்துதல், 11:00 மணிக்கு, மயானக்கொள்ளை பெருவிழா நடக்கிறது. 7ல், பல்லக்கு உற்சவம், 8ல், கும்பபூஜை மற்றும் கொடியிறக்கம் நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !