தேவகோட்டைநகர மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேகம்
ADDED :2495 days ago
தேவகோட்டை:நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஒரு வருடம் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று (மார்ச்., 22ல்) வருஷாபிஷேகம் நடந்தது. முன்னதாக நேற்று முன்தினமும் (மார்ச்., 21ல்), நேற்று (மார்ச்., 22ல்) காலையும் இரண்டு கால யாகபூஜை நடந்தன. பூர்ணாகுதியை தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர், மீனாட்சிஅம்மன், மற்றும் பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் யாகபூஜையில் பங்கேற்றனர்.