உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் அகிலாண்டேஸ்வரி உடனுறை கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி சிறப்பு யாகம் நடந்தது.

நெல்லிக்குப்பத்தில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பழமையான அகிலாண்டேஸ்வரி உடனுறை கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி சிறப்பு யாகம் நடந்தது.பிறகு கைலாசநாதருக்கு சங்காபிஷேகமும் சிறப்பு தீபாராதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அகிலாண்டேஸ்வரி உடனுறை கைலாசநாதர் மாடவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை பாக்யராஜ் பூசாரி, முருகானந்தம் குருக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !