திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி விழா
ADDED :2388 days ago
விழுப்புரம்: விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.விழாவையொட்டி, கடந்த 20ம் தேதி மாலையிடுதல் உற்சவத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மகாபாரத சொற்பொழிவு நடந்தது. 8ம் நாள் உற்சவமாக நேற்று முன்தினம் இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று தீ மிதி திருவிழா நடந்தது. நாளை 31ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.