சோழவந்தான் அருகே இரும்பாடியில் பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2589 days ago
சோழவந்தான்:சோழவந்தான் அருகே இரும்பாடியில் பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.இதையொட்டி மார்ச் 31 கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று 1ல், காலை சிறப்பு தீபாராதனைக்கு பின் பட்டர் பிரசாத் சர்மா, சிவாச்சார்யார் சிவசுப்ரமணியன் புனிதநீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். பின் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.