மயிலம் பகுதி கோவில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED :2405 days ago
மயிலம்: மயிலம் பகுதி கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.மயிலம் அடுத்த ஆலகிராமத்திலுள்ள திரிபுரசுந்தரி சமதே எமதண்டீஸ்வரர் கோவிலில் நேற்று (ஏப்., 2ல்) பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 5:00 மணிக்கு மூலவருக்கு பால், சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள நந்திக்கு நடந்த மகா தீபாராதனை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதேபோன்று, மயிலம் சுந்தர விநாயகர் கோவில் மற்றும் பெரும்பாக்கம், தென்பசியார், செண்டூர், நெடி, பாதிராப்புலியூர் ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.