அழகர்மலை நூபுர கங்கையில் பக்தர்கள் புனித நீராடல்
ADDED :2463 days ago
அலங்காநல்லுார், அழகர்மலை உச்சியில் உள்ள நுாபுர கங்கையில் பங்குனி அமாவாசையையொட்டி ஏராளமான பக்தர்கள் நேற்று புனித நீராடினர். பின் அங்குள்ள ராக்காயி அம்மனை தரிசித்தனர். சோலைமலை முருகன் கோயிலில் வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தன. பக்தர்கள் நெய் விளக்கேற்றி வழிபட்டனர்.