உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா

அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த சம்மந்தம் அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை  திருவிழா நடந்தது. கடந்த 3ம் தேதி காலை 9.00 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. அன்று 10.00 மணிக்கு பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு விழாவான மயானக்கொள்ளை திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவையொட்டி அன்று காலை 10.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 3.00 மணிக்கு அக்னிகரகம், உச்சிக்கொப்பறை புறப்பாடு செய்து, மாலை 6.00 மணிக்கு மயானக்கொள்ளை நடந்தது. நேற்று விளக்குபூஜை நடந்தது.  ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !