உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவக்கரையில் வக்கிரகாளியம்மன் கோவிலில் ஜோதி தரிசனம்

திருவக்கரையில் வக்கிரகாளியம்மன் கோவிலில் ஜோதி தரிசனம்

மயிலம்:திருவக்கரையில் வக்கிரகாளியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஜோதி தரிசனம் நடந்தது.மயிலம் அடுத்த வக்கிரகாளியம்மன், சந்திர மவுலீஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கபட்டு வழிபாடுகள் நடந்தது.

கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், வரதராஜ பெருமாள், சந்திரமவுலீஸ்வரர், குண்டலி மாமுனி, வக்கிரகாளியம்மன், வக்கிர சனி ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேகம், வழிபாடு
நடந்தது.பவுர்ணமியை முன்னிட்டு இரவு 8:00 மணிக்கு மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வீதியுலா காட்சி சிறப்பாக நடந்தது. இரவு 12:00 மணிக்கு வக்கிரகாளியம்மன்
கோவிலில் ஜோதி காண்பித்தனர். பவுர்ணமி விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையாளர் ஜோதி, செயல் அலுவலர் நாகராஜன், மேலாளர் ரவி, குருக்கள் சேகர் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !