உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொக்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

சொக்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

செஞ்சி: செத்தவரை சொக்கநாதர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.

செஞ்சி தாலுகா செத்தவரை நல்லாண்பிள்ளை பெற்றாள் சிவஜோதி மோன சித்தர் ஆசிரமத்தில் உள்ள மீனாட்சி உடனாகிய சொக்கநாதர் கோவிலில் சித்திரை பெருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.11ம் தேதி முதல் 18ம் தேதி வரை தினமும் சிறப்பு ஹோமம், அபிஷேக அலங்காரம், சாமி கோவில் உலா நடந்தது.முக்கிய நிகழ்வாக திருக்கல்யாண வைபவம் நேற்று காலை 11 மணிக்கு சிவஜோதி மோனசித்தர் தலைமையில் நடந்தது. இதை முன்னிட்டு சொக்கநாதர், மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை, 12 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.2 மணிக்கு சிவஜோதி மோனசித்தர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். விழா ஏற்பாடுகளை சிவஜோதி மோன சித்தர் ஆசிரம டிரஸ்டிகள், செயற்குழு உறுப்பினர்கள், சிவனடியார்கள், செத்தவரை, நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராம மக்கள் செய்திருந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !