மடப்புரம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி
ADDED :2691 days ago
திருப்புவனம் : மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று உண்டியல் எண்ணும் பணி நடந்தது.இங்கு 40 நாட்களுக்கு ஒரு முறை இப்பணிநடக்கும். செயல்அலுவலர் செல்வி தலைமையில் கோயில் ஊழியர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் 31லட்சத்து 56ஆயிரத்து163 ரூபாய், 282 கிராம்தங்கம், 413 கிராம் வெள்ளியை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.