செஞ்சியில் வெங்கடாஜலபதி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2702 days ago
செஞ்சி: மேல்தாங்கல் திருவத்திமலையில் 4ம் ஆண்டு கும்பாபிஷேக விழா மற்றும் திருக்கல் யாண உற்சவம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று முன்தினம் (ஏப்., 25ல்) காலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், தொடர்ந்து விசேஷ ஹோமமும், மூலவருக்கு கலசாபிஷேகமும் தொடர்ந்து வீதியுலாவும் நடந்தது. மாலை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞர் அணி தலைவர் செந்தில் குமார் தலைமையில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
தொடர்ந்து அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. புலவர் கந்தசாமியின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. அறக்கட்டளை நிர்வாகி சுவாமிஜி உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.