பெரியநாயக்கன்பாளையத்தில் ராமானுஜர் திருநட்சத்திர திருவிழா
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையத்தில் ராமானுஜர், பத்து நாள் திருநட்சத்திர திருவிழாவையொட்டி, சந்திரபிரபை வாகனத்தில், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித் தார். பெரியநாயக்கன்பாளையத்தில் ஸ்ரீ எம்பெருமானார் தர்சன ஐக்கிய சபா சார்பில், ராமானுஜர் திருநட்சத்திர திருவிழா கடந்த, 30ம் தேதி முதல் நடந்து வருகிறது. முதலில், மங்களகிரி வாகனத்தில் ஸ்ரீ ராமானுஜர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, சூரிய பிரபை வாகனத்தில், ராமானுஜர் ராமராகவும், சந்திரபிரபை வாகனத்திலும், முத்துபந்தல், சேஷ வாகனம், பல்லக்கு சேவையிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று (மே., 6ல்), அலங்கார பல்லக்கு, நாளை (மே., 7ல்) சர்வ பூபால வாகனம், 8ம் தேதி விமானத்தில் புறப்பாடு, 9ம் தேதி திருப்பள்ளியெழுச்சி, திருமஞ்சனம், விசேஷ ஆராதனை, ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் குதிரை தம்பிரான் பேரில் திருவீதியுலா, ஸ்ரீ ராமானுஜர்புஷ்ப பல்லக்கில் திருவீதியுலா என தொடர்ந்து, 10 நாட்களும் விழா நடக்கிறது. விழாவையொட்டி, தினமும் மாலை திருவீதி பஜனை நடக்கிறது.