உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயில் உண்டியலில்38 நாட்களில் ரூ.3.63 கோடி

பழநி கோயில் உண்டியலில்38 நாட்களில் ரூ.3.63 கோடி

பழநி:கோடை விடுமுறையை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் இரண்டாவது முறையாக கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. அதில் ரொக்கமாக ரூ.ஒரு கோடியே 43 லட்சத்து 59ஆயிரத்து 240 ம், தங்கம்- 455கிராம், வெள்ளி- 4ஆயிரத்து 150கிராம், வெளிநாட்டு கரன்சிகள்- 186 கிடைத்துள்ளது.

இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொ)செந்தில்குமார், திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், முதுநிலைக்கணக்காளர் மாணிக்கவேல், மேலாளர் உமா, அலுவலர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கடந்த மே 3ல் கிடைத்தது ரூ. 2 கோடியே 19 லட்சத்து 78ஆயிரத்து 605. இதனுடன் நேற்றைய (மே., 8ல்) தொகை ரூ. 3 கோடியே 63 லட்சத்து 37 ஆயிரம் என 39 நாட்களில் ரூ.3.63 கோடி காணிக்கை கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !