கடலூர் ராஜகோபால சுவாமி கோவில் திருப்பணிகள் துவக்கம்
கடலூர்: கடலூர், புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் துவங்க உள்ளது.கடலூர், புதுப்பாளையத்தில் பழமையான
செங்கமலத் தாயார் சமேத ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ராஜகோபுரம் கடந்தாண்டு கடலூர் ஜி.ஆர்.கே.எஸ்டேட் நிர்வாக இயக்குனர் துரைராஜ் உபயத்தில் கட்டப்பட்டது.இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு வரும் ஜூன் மாதம் பாலாயலம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார் சன்னதிகளுக்கு திருப்பணிகள் துவங்கப்பட உள்ளதால் திருப்பணிக்கு உதவி செய்யும் பக்தர்கள் கோவில் நிர்வாகத்தை அணுகலாம்.திருப்பணி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் செந்தில்வேலன், உதவி ஆணையர் ரேணுகாதேவி, நிர்வாக அதிகாரி முத்துலட்சுமி செய்து வருகின்றனர்.