எட்டில் அடங்கும் பக்தி
ADDED :2337 days ago
பக்தி அனுபவம் எட்டு நிலைகளில் வெளிப்படும்.
சிரவணம்- – கடவுளின் திருநாமம் கேட்டல்
கீர்த்தனம்- – கடவுளின் பெருமைகளைப் பாடுதல்
ஸ்மரணம் – கடவுளை இடைவிடாது நினைத்தல்
பாத சேவனம்- – கடவுளுக்கு தொண்டு செய்தல்
அர்ச்சனம் – மந்திரம் சொல்லி மலர் தூவுதல்
வந்தனம்- – உடலால் பணிந்து வழிபடுதல்
தாஸ்யம்- – கடவுளுக்கு அடிமையாதல்
ஆத்ம நிவேதனம்- – கடவுளுடன் ஒன்றி விடுதல்.