நரசிம்மரைப் பற்றிய முக்கிய நூல்கள்
1. பாகவதம் 2. ஹரிவம்சம்
3. விஷ்ணுபுராணம் 4. விஹகேந்திரஸம்ஹிதை
5. பத்ம ஸம்ஹிதை 6. ஈசுவர ஸம்ஹிதை
7. பராசர ஸம்ஹிதை 8. ஸாத்வத ஸம்ஹிதை
9. சேஷ ஸம்ஹிதை 10. வைகானச ஆகமம்
11. விஷ்ணு ஸம்ஹிதை 12. ஸ்ரீ ப்ரஸன்ன ஸம்ஹிதை
13. விஷ்ணு தந்திரம் 14. விஷ்வக்சேன ஸம்ஹிதை
15. ஹயசீர்ஷ ஸம்ஹிதை 16. பரமேசுவர ஸம்ஹிதை
17. மத்ஸ்ய புராணம் 18. சில்ப ரத்தினம்
19. ப்ரபஞ்ச சார ஸங்கிரஹம் 20. நரசிம்ம புராணம்.
கம்பப் பெருமாள்கள்: கலைகளுக்கு அதிபதியான சரஸ்வதி (பேச்சு + அம்மன்) பேச்சியம்மன் ஆகவும்; ஓம் காளீஸ்வரி அங்காளேஸ்வரி ஆகவும்; பிரும்மன் விரும்பன் ஆகவும் மாறியது போலவே ஸ்தம்பம் (தூண்) கம்பம் ஆகி, கம்பத்திலிருந்து வெளிப்பட்ட விஷ்ணு கம்பப் பெருமாள் ஆகிவிட்டார். தென் தமிழ்நாட்டில், குறிப்பாக மதுரைக்குத் தெற்கே கம்பப்பெருமாள் கோயில்கள் அதிகமாகவுள்ளன. கர்நாடகத்தில் நரசிம்மரை கம்படய்யா என்பது குறிப்பிடத்தக்கது.