உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் வைகாசி விசாக திருவிழா

திருப்பரங்குன்றம் வைகாசி விசாக திருவிழா

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் அருகே ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் 79வது ஆண்டு வைகாசி விசாக திருவிழா மே 7 சுவாமிக்கு காப்பு கட்டுடன் துவங்கியது.நேற்று
முன்தினம் மே., 18ல் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், சக்தி வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம், பூஜைகள் நடந்தன. 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்றனர். கோயில் நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !