ராமேஸ்வரம் கோயிலில் ரூ.66.45 லட்சம் காணிக்கை
ராமேஸ்வரம், : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 66.45 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்தது.ராமேஸ்வரம் திருக்கோயிலில் 30 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் 22ல் ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதி முன்புள்ள உண்டியல்களை திறந்து கோயில் ஊழியர்கள் காணிக்கையை சேகரித்தனர்.
பின், காணிக்கையை கோயில் இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில் திருக்கோயில் கல்யாண மண்டபத்தில் கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப் பாளர் கக்காரின், பாலசுப்பிரமணி, பேஷ்கார்கள் கமலநாதன், கலைசெல்வன், கண்ணன், முனியசாமி, கோயில் ஊழியர்கள் பலர் எண்ணினர்.இதில் ரொக்கம் 66 லட்சத்து 45 ஆயிரத்து 73 ரூபாயும், தங்கம் 66 கிராம், வெள்ளி 1 கிலோ 530கிராம் காணிக்கையாக கிடைத்தது. பக்தர்கள் செலுத்திய இக்காணிக்கையை அரசு வங்கியில் கோயில் அதிகாரி டெபாசிட் செய்தார்.