உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் தேரோட்டம்

ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் தேரோட்டம்

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த ஆதிநாராயணபுரம் ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில், 59வது ஆண்டு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர் உற்சவம் நடந்தது.விழா கடந்த மாதம் 23 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில், பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. தேர் உற்சவம் நேற்று நடந்தது. அதனையொட்டி காலை 5.00 மணிக்கு,பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.காலை 7.00 மணிக்கு தேர் உற்சவம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், கோவில் வளாகத்தை வந்தடைந்தது. இரவு 9.00 மணிக்கு திருமஞ்சனம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !