வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கிருத்திகை வழிபாடு
ADDED :2317 days ago
வால்பாறை:வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், வைகாசி கிருத்திகையையொட்டி, நேற்று முன் தினம் (ஜூன்., 2ல்) மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.
வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன்கோவில், வாழைத்தோட்டம், மாரியம்மன் கோவில், காமாட்சியம்மன் கோவில்களில் கிருத்திகை பூஜையையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.