உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் வீரமாஸ்த்தியம்மனுக்கு 6ல் கும்பாபிஷேகம்

அன்னூர் வீரமாஸ்த்தியம்மனுக்கு 6ல் கும்பாபிஷேகம்

அன்னூர்: குப்பனூர் ஊராட்சி, அழகேபாளையத்தில், பழமையான வீரமாஸ்த்தியம்மன் கோவில் சிறியதாக இருந்தது. பக்தர்கள் முயற்சியால், புதிதாக ஆகம சாஸ்திரப்படி கோவில் கட்டப்பட்டுள்ளது. இத்துடன், விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில்களுக்கும் திருப்பணி கள் செய்யப்பட்டன.இதையடுத்து, கும்பாபிஷேக விழா வரும், 5ம் தேதி காலையில் கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது.

காலை 10:00 மணிக்கு, பவானி, கூடுதுறை சென்று, தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது.மாலையில், மாரியம்மன் கோவிலிலிருந்து, பாலிகை எடுத்து வரப்படுகிறது. மாலையில், காமாட்சிபுரி ஆதீனம், சிவலிங்கேஸ்வர சுவாமிகள் முன்னிலையில் முதல் கால பூஜை நடக்கிறது. இரவு எண் வகை மருந்து சாத்துதலும் நடக்கிறது.வரும், 6ம் தேதி காலை 7;45 மணிக்கு, சித்தி விநாயகர், மாரியம்மன், கோபுரம் விமான கலசம் வீரமாஸ்த்தியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !