சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புறக்காவல் நிலையம்
ADDED :2316 days ago
பேரையூர், பேரையூர் தாலுகா சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புறக்காவல் நிலையத்தை பேரையூர் டி.எஸ்.பி., மதியழகன் திறந்து வைத்தார்.இந்த கோவிலில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் நிகழ்ச்சிகள் நடைபெறும். விசஷே நாட்களில் இங்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 3 போலீசார் பணியில் ஈடுபடுவார்கள். டி.எஸ்.பி. ராஜா, அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன், கோயில் செயல் அலுவலர் சிவராமசூரியன் கலந்துகொண்டனர்.