உத்தரகோசமங்கை அய்யனார் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :2621 days ago
உத்தரகோசமங்கை:உத்தரகோசமங்கை அருகே களரி கிராமத்தில் உள்ள பூரண, புஷ்கலா தேவியர் சமேத காரார்ருடைய அய்யனார் கோயிலில் வைகாசி சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரத் தில் காணப்பட்டார். பெண்கள் பொங்கலிட்டனர். உலக நன்மைக்கான கூட்டு வழிபாடு நடந்தது.