உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவாலயபுரம் சங்கரநாராயணர் கோவிலில் மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேக விழா

சிவாலயபுரம் சங்கரநாராயணர் கோவிலில் மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேக விழா

மதுரை  மாவட்டம்,  மேலூர் தாலுகா,  தும்பைப்பட்டி,  சிவாலயபுரம்   அருள்மிகு ஸ்ரீ சங்கர லிங்கம் சுவாமி, அருள்மிகு ஸ்ரீ கோமதி அம்மன், அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயணர் கோவிலில் இன்று மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக சிறப்பு  அர்ச்சனை,  யாகசாலை பூஜைகள் ஹோமம் சிறப்பு அலங்கார வழிபாடு நடைபெற்றது.   முன்னதாக கோமாதா பூஜை,  கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை,  அஷ்ட லட்சுமி பூஜைகள் தொடங்கி நடைபெற்றது.

நாட்டின் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித் தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், மத நல்லிணக்கம் மலரவும், மக்கள் மனதில் மகிழ்ச்சியாக வாழவும்,  சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டனர்.  முன்னதாக  சங்கர லிங்கம் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள், பஞ்கவ்யம்,  பால்,  தயிர், இளநீர்,  கரும்புச் சாறு  பஞ்சாமிர்தம்,  ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது.  பக்தர்கள் சிவபுராணம், கோளறு பதிகம், திருவாசகம்  பாராயணம் செய்தனர்.  அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் , சுண்டல், பால்,  பஞ்சாமிர்தம்  புளிசாதம் பிரசாதம் வழங்கப்பட்டது.  அருள்மிகு ஸ்ரீ சங்கர லிங்கம் சுவாமி திருநீர்,  சந்தனக் காப்பு, சங்கர நாராயணர்   அலங்காரத்தில் காட்சியளித்தார்.  ரமேஷ் அய்யர் , சங்கர நாராயணர் கோவில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் விழாவை சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !